Monday, January 26, 2009

இயற்கை! !

வண்டு வந்து உண்டுவிடச்
செண்டு மலர்த் தேனை இங்கு
கொண்டு வந்து வைத்தது யார் ஞானப் பெண்ணே ?அதைக் கண்டு நீயும் கூறிவிடு ஞானப்பெண்ணே !

இரவு வரும் வேளைதன்னில்
உறவு கொள்ள வெண்ணிலவை
வரவு செய்யச்சொன்னது யார் ஞானப்பெண்ணே?-அதை
அறிந்து நீயும் சொல்லிவிடு ஞானப்பெண்ணே !

ஆடும் அலை மேகமாகி
வானமெனும் மேடையேறிக்
கொட்டும்மழை கொட்டுவதேன் ஞானப்பெண்ணே? -அதைக்
கொட்டச் சொல்லி விட்டது யார் ஞானப்பெண்ணே !

வெள்ளி வந்து அள்ளி வீசும்
வெண்கதிரின் வேகத்திலே
அல்லி மலரும் மலர்வதுமேன் ஞானப்பெண்ணே ?-அதைச்
சொல்லி விளையாடிவிடு ஞானப் பெண்ணே!

சின்னத்துளி விந்து சென்று
பெண்ணினுடல் தங்கி நின்று
வண்ணப்பூவாய் வருவதுமேன் ஞானப் பெண்ணே ?அதை
எண்ணி நீயும் கூறிவிடு ஞானப் பெண்ணே !!

கண்ணும் கண்ணும் பார்த்துக்கொள்ள
காதல் நெஞ்சில் ஊறிக்கொள்ள
நெஞ்சம் ஏங்கித்தவிப்பதுமேன் ஞானப்பெண்ணே ?-அதைக்
கண்டு நீயும் காதல் கொள்ளு ஞானப் பெண்ணே !!

3 comments: