Monday, January 26, 2009

தனி மரம் !

நறுமணங்கள் வீசுகின்ற
நந்தவனச் சோலையிலே
மலர்ந்ததன்றோ நம் காதல் கண்ணம்மா -அதை
மறப்பதற்கா நாம் பெற்றோம் பொன்னம்மா ?

இரு மனங்கள் ஒன்றாகி
ஒரு மனமாய் ஆனபின்பு
தனி மரமாய்ப் போனதேண்டிதங்கம்மா -என்னைத்
தனி மரமாய் செய்ததேண்டி தங்கம்மா ?

இராக இசை பாடி வரும்
மேக மலர்ச்சோலையிலே
மோக மலர் பறித்தோமே சின்னம்மா -அந்த
மோகனத்தை ஏன் மறந்தாய் சின்னம்மா ?

கண்களிலே கவிபாடி
காதலெனும் இசை பாடி
களித்திருந்தோம் காலமதைச் சின்னம்மா -அதை
கழித்துவிட்டு ஏன் போனாய் கண்ணம்மா ?

காலமெல்லாம் அழுதழு து
கரைந்துவிட்ட என் மேலே
கருணையுடன் ஒரு பார்வை வராதா -அது
காதலெனும் இன்பமதைத்தராதா ?

No comments:

Post a Comment