Friday, January 23, 2009

நான் புத்தன் இல்லை!

எப்போது போவான்
ஆதவன் என்றே
ஏங்கித் தவித்த நிலவு
எழுந்து வந்தது
அந்த வேளை !
அந்தி வேளை !!


இரவின் கைகளை
நிலவு
இறுக்கிப் பிடித்துவிட்டது !
அதனால்
அரைப் பகலாய்
அந்தி மலர்ந்தது !

அவள் வந்தாள்
ஆடி நின்றாள்
நிலவு தன் பொழிவை
அவளுக்கு
இரவல் கொடுத்து விட்டது !

தங்கம் தன் நிறத்தை
அவளுக்கு த்
தானம் கொடுத்து விட்டது !

அழகின் உச்சியே
அவள் பாதத்தை
முத்தமிடும் போது
கரையாமல் இருப்பதற்கு
என் மனது என்ன
கல்லா ?

No comments:

Post a Comment