Monday, January 19, 2009

நெஞ்சினைத்தா

காதல் கொண்ட நெஞ்சம் தன்னில்
வாழும் அன்பு ராணி -நான்
மோகம் கொண்டமலரே உந்தன்
அன்பில் வாழும் தேனி !

தேகம் கொண்ட அழகில் இல்லை
தேனை ஒத்த வாழ்வு -அன்பு
ராகம் கொண்ட பாட்டே உந்தன்
மனமே எந்தன் வாழ்வு !!

குழந்தை போலக்கொஞ்சி வழியும்
அன்பு கலந்த புன்னகை -அதை
கண்டு கொண்ட எந்தன் நெஞ்சில்
பொங்கி வரும் சிந்தனை !

காசு பணம் தேவைஇல்லை
கள்ளமற்ற உள்ளமே - உன்
கருணை விழி போதும் எந்தன்
வாழ்வு என்றும் மலருமே !

உன்னை அன்றி எந்தன் நெஞ்சம்
இல்லை ஒரு பெண்ணிடம் -அதை
எண்ணி எடுத்து வந்து என்னைக்
கொடுத்து விட்டேன் உன்னிடம் !!

வயது முதிர்ந்த காலம் வரப்
புதையும் உடல் மண்ணிடம் -அந்தக்
காலம் முடிந்து போகும்வரை
நெஞ்சம் இருக்கும் உன்னிடம் !!

ஏழு என்று எழுதி வைத்தான்
பிறவி வரும் கணக்கினை - அதற்கு
மேலும் ஒன்று இருக்குமெனில்
அதிலும் தாடி நெஞ்சினை !

No comments:

Post a Comment