Saturday, January 24, 2009

செல்லாக்காசு !

நான்
நாத்திகனாய் இருந்து
ஆத்திகத் தளத்துள்
அடியெடுத்து வைத்தேன் !
அப்போதாவுது
உன் பார்வை
என் மீது படாதா என்று ...

நான்
கல்லாதவன்
காவியம் படித்து
கவிதை கூட எழுதினேன்
உன்
பார்வை
அதன் மீதாவது படாதா என்று !

கல்லானவளே !
உன்னைப்
பொல்லாதவள்
என்று
புதுக் கவிதை எழுதி விட்டேன் போடி .......

அத்தோடு என்
கல்லறையில்
பொல்லாத வளிடத்தில்
செல்லாக்காசானவன்
என்றும்
எழுதச் சொல்லிவிட்டேன் !!

No comments:

Post a Comment