Monday, January 26, 2009

அருங்காதலியே !

பவளச் சந்திரன் போலுருவாகி
அருவான்வில்லின் பாதையில் இறங்கி
தவழும் தென்றல் குளிர்ந்ததுபோலத்
தரணியில் நடந்த தளிர் மாமணியே !

திருவான் மின்னல் தருமொளியாகி
உருவாய் அமைந்த கண்களும் விளங்கக்
கருவான் மேகக் கூந்தலும் அழகின்
பேராய் அமைந்த திருமாமயிலே !!

பச்சைப் பசுமயில் போல் அழகாகி
பசும்பொன் வார்த்த மேனியளாகி
உச்சிக்கதிரவன் போல் ஒளியான
பச்சைப் பவள இளமாந்தளிரே !

வைகறைக் கதிரவன் வரவினைக்கண்டு
பொய்கையில் பூத்த புதுத்தாமரைபோல்
மெய்யாய் அழகிய மேனியைக்கொண்ட
அய்யம் இல்லா அரும்பேரழகே !

நல்லுருவாகிய செவ்விதழ் மொழியும்
வேலுருவாகிய அழகிய விழியும்
கல்லுருவாக்கும் போதையைப் பொழிய
துள்ளியே வந்த திருப் பேரொளியே !

அன்னப் பற வையின் அழகினை நினைத்து
எண்ணம் பரிமேல் எண்திசைதிரிந்து                                                                 விண்ணில் பறக்கும் என்மாமனதை
அணைத்திட வாராய் அருங்காதலியே !!

No comments:

Post a Comment