Friday, January 23, 2009

காதலை மாற !

என்
கனவுப் படகு கவிழ்த்தபோது
நினைவுக் கைகள் -என்
நித்திரையைக் கலைத்து விட்டது !

என்
நினைவுக்கைகள் என்றும்
அவளையே தழுவிக்கொண்டிருக்கிறது !


என்
எண்ணத்திரையில்
அவள் இல்லாத ஒரு
வண்ணக்கனவு வருவதே இல்லை !

நான்
எழுதும் கவிதைகளில்
விழுதாய் அவளின்
விருப்பத்தை விதைத்தவன் !

அவளின்
நினைவில்
மனது
மாம்பழ வண்டாய்
மயங்கிக் கிடந்தது !

மயங்கிய வண்டுக்கு
மயக்கம் தெளிந்த போது
மாம்பழவித்தோ
மண்ணுள் புதைந்து விட்டது !

என் காதல் மாங்கனியாள்
நினைவில்
நான் மூழ்கியிருந்த போது ,
அவள் விலை போய் விட்டாள் !

நான்
சாவுக்கு
வர வேற்புக் கவிதை பாடி
வாயிலில் நிற்கிறேன் !
அவளோ
காதலை மறக்கக்
கடிதம் போடுகிறாள் !!

No comments:

Post a Comment