தத்தைமொழி பேசியென
தன்பை வாங்கிக்கொண்டவள்
உச்சிமுதல் பாதம் வரை
உன்மையன்பு கொண்டவள்
முத்தைஒத்த விழிகளிலே
மோகனத்தைத் தந்தவள்
சொத்து சுக ஆசைகளைச்
சொத்தை எனச்சொன்னவள் !!!
கள்ளல்லா விழிகளிலே
கருணை கொண்டு சிரிப்பவள்
உள்ளம் கொண்ட அன்பு தன்னில்
உலுக்கி என்னை வதைப்பவள்
எள்ளளவும் பொய்ம்மையின்றி
என்னை அணைத்து மகிழ்பவள்
சொல்லி வைக்க வார்த்தைஇல்லை
என்னவளோ உயர்ந்தவள் !
பட்டுப் போன்ற பாதமலர்
கிட்டக்கிட்ட நடந்திடும்
மெட்டிஓசை கேட்டு நெஞ்சம்
கெட்டிமேளம் கொட்டிடும்
எட்டிநின்ற எனது நெஞ்சில்
எதுகை மோனை சொட்டிடும்
திட்டம்போட நினைவுச் சொர்க்கம்
கிட்டவந்து நின்றிடும் !
தன்பை வாங்கிக்கொண்டவள்
உச்சிமுதல் பாதம் வரை
உன்மையன்பு கொண்டவள்
முத்தைஒத்த விழிகளிலே
மோகனத்தைத் தந்தவள்
சொத்து சுக ஆசைகளைச்
சொத்தை எனச்சொன்னவள் !!!
கள்ளல்லா விழிகளிலே
கருணை கொண்டு சிரிப்பவள்
உள்ளம் கொண்ட அன்பு தன்னில்
உலுக்கி என்னை வதைப்பவள்
எள்ளளவும் பொய்ம்மையின்றி
என்னை அணைத்து மகிழ்பவள்
சொல்லி வைக்க வார்த்தைஇல்லை
என்னவளோ உயர்ந்தவள் !
பட்டுப் போன்ற பாதமலர்
கிட்டக்கிட்ட நடந்திடும்
மெட்டிஓசை கேட்டு நெஞ்சம்
கெட்டிமேளம் கொட்டிடும்
எட்டிநின்ற எனது நெஞ்சில்
எதுகை மோனை சொட்டிடும்
திட்டம்போட நினைவுச் சொர்க்கம்
கிட்டவந்து நின்றிடும் !
No comments:
Post a Comment