என்னரும் நெஞ்சம்தன்னில்
வண்ணமாய் எந்தநாளும்
கண்ணிரு விழிகள் போல
மின்னிடும் காதல் தன்னை
திண்ணமாய் எழுதி வைத்த
கன்னியே உன்னை நெஞ்சம்
எண்ணியே கவிதை நூறை
என்றுமே எழுதி வாடும்!
சொந்தமாய் உன்னை எந்தன்
நெஞ்சிலே சூடத்தானே
பந்தமாய் வாழ்ந்த எந்தன்
நெஞ்சினை உனக்குத் தந்தேன்
காந்தமாய் இழுக்கும் உந்தன்
கருவிழிக் கவிதை கேட்டு
சந்தமாய் எழுத்தும் நல்ல
கவிஞனே ஆகிப்போனேன் !
மேகமாய் ஆடும் உந்தன்
மோகனக் குழலின் மீது
மோகமாய் ஆடும் நல்ல
மல்லிகை ஆக வந்தேன்
வேகமாய் வீசும் அந்த
வெயிலின் கொடுமை தன்னில்
தேகமே துவண்டு போகச்
சோகமாய் வாடி விட்டேன் !
அரங்கிலே ஆடும் நல்ல
மரமகள் போல நீயும்
கரங்களை அசைத்து உந்தன்
கவிதையைச் சொல்லும்போதும்
வரமென வந்த உந்தன்
வாய்மொழி கேக்கும் போதும்
மரமென விளைந்த நெஞ்சம்
பனிமலர் போல மாறும் !
கண்களில் சொல்லும் உந்தன்
கவிதையைக் கேட்கும் போது
பெண்களின் மனது கூடப்
போதையில் ஆழ்ந்து போகும்
என்னரும் காதல் நெஞ்சில்
ஊரீடும் கவிதை தன்னை
என்னிரு கண்கள் கண்டு
ஏக்கத்தில் வாடிப் போகும் !
பூக்களை போல உந்தன்
பொன்மனம் காதல் கொள்ள
வெட்கத்தில் சிவந்து போகும்
பூ முகம் காணும் போது
ஏக்கத்தில் வாடி விட்டு
தூக்கத்தை மறந்து நெஞ்சம்
பக்கத்தில் நிறைந்து போகும்
பாக்களை எழுதி வாழும் !
வில்லென வளைந்து பேசும்
புருவத்தின் அழகு கண்டா
பல்லினைக் காட்டி உந்தன்
பாதத்தில் வீழ்ந்து போனேன்
இல்லை என் இனிய ராணி
கல்லென சொல்லும் உந்தன்
நல்லரும்கவிதை கேட்டே
காதலில் ஏங்கிப் போனேன்!
இருவிழி திறந்து மெல்ல
தருகிற இன்பம் தன்னை
பெறுகிற ஆசை கொண்டா
பேதையே காதல் கொண்டேன்
உருக்கிய தங்கம் போல
உடலினைப் பெற்ற தாலோ
இருகரம் நீட்டி உன்னை
இணைத்திட நானும் வந்தேன்
கார்குழல் மறைவினின்று
கரு விழி ஆடுகின்ற
திருவிளை யாடல் தன்னை
சிறுமனம் கண்டு கொண்டு
உறவினில் ஆசை கொண்ட
பருந்தினைப் போல காமச்
சிறகினை விரிக்கத் தானோ
சொந்தமாய்க் காதல் கொண்டேன்!!!
செம்மலர் இதழ்கள் தன்னில்
செம்மையாய் முத்தமொன்றை
எம்மலர் இதழ்கள் சூட
ஏங்கியா வந்து நின்றேன்
உம்மலர் இதழ்கள் தன்னில்
உதிர்ந்திடும் கவிதை கேட்டே
எம்மனம் ஏங்கி ஏங்கி
உன்னிடம் வந்ததம்மா
கட்டியே அனைத்து உன்னை
கனியிதழ் சுவைத்து மெல்லக்
கட்டிலில் ஒட்டி வாழும்
கனவை நான் காணவில்லை
எட்டியே நின்று உந்தன்
இதழ் சிந்தும் கவிதை தன்னில்
ஒட்டியே ஒழுகும் வெல்லப்
பாகினை குடிக்க வந்தேன்
சந்தமாய் சொல்லும் உந்தன்
செந்தமிழ்க் கவிதை தன்னை
நெஞ்சிலே சூடும் போது
சிந்தனை பொங்கி வருமே
கந்தலாய்ப் போன நெஞ்சம்
கவிதையை கேட்ட பின்பு
சொந்தமாய் உன்னை எண்ணி
சொர்க்கத்தில் மிதந்ததம்மா !
காலையில் எழுந்து உந்தன்
கருவிழி காண வேண்டி
வேலையை மறந்து நெஞ்சம்
வேகமாய் வந்த போது
சேலையாய் உந்தன்மீது
சேர்ந்தநல் துணைவரோடு
தாழையே உன்னைக்கண்டு
தனிமரம் ஆகிப்போனேன்!!!
அனிச்சப்பூ போல நீயும்
கனவினில் வந்து வந்து
கனியிதழ் வாயினின்று
கவிதையைச் சொல்லுவாயே
பனிபடர் மலரே அந்தப்
பாக்களின் நினைவில்தானே
தனிமரம் போல நானும்
தரணியில் வாடுகின்றேன்!
வாடிய நெஞ்சம் இன்று
வளர்தமிழ் கலந்ததாலே
ஆடியமனத்தில் நாளும்
அழுந்திய உயிராய் நிற்கும்
தேடியே சரண் புகுந்து
திகழொளி யா கி வந்த
நாடிய தமிழையென்றும்
நலமுடன் போற்றி வாழ்வேன் !
வண்ணமாய் எந்தநாளும்
கண்ணிரு விழிகள் போல
மின்னிடும் காதல் தன்னை
திண்ணமாய் எழுதி வைத்த
கன்னியே உன்னை நெஞ்சம்
எண்ணியே கவிதை நூறை
என்றுமே எழுதி வாடும்!
சொந்தமாய் உன்னை எந்தன்
நெஞ்சிலே சூடத்தானே
பந்தமாய் வாழ்ந்த எந்தன்
நெஞ்சினை உனக்குத் தந்தேன்
காந்தமாய் இழுக்கும் உந்தன்
கருவிழிக் கவிதை கேட்டு
சந்தமாய் எழுத்தும் நல்ல
கவிஞனே ஆகிப்போனேன் !
மேகமாய் ஆடும் உந்தன்
மோகனக் குழலின் மீது
மோகமாய் ஆடும் நல்ல
மல்லிகை ஆக வந்தேன்
வேகமாய் வீசும் அந்த
வெயிலின் கொடுமை தன்னில்
தேகமே துவண்டு போகச்
சோகமாய் வாடி விட்டேன் !
அரங்கிலே ஆடும் நல்ல
மரமகள் போல நீயும்
கரங்களை அசைத்து உந்தன்
கவிதையைச் சொல்லும்போதும்
வரமென வந்த உந்தன்
வாய்மொழி கேக்கும் போதும்
மரமென விளைந்த நெஞ்சம்
பனிமலர் போல மாறும் !
கண்களில் சொல்லும் உந்தன்
கவிதையைக் கேட்கும் போது
பெண்களின் மனது கூடப்
போதையில் ஆழ்ந்து போகும்
என்னரும் காதல் நெஞ்சில்
ஊரீடும் கவிதை தன்னை
என்னிரு கண்கள் கண்டு
ஏக்கத்தில் வாடிப் போகும் !
பூக்களை போல உந்தன்
பொன்மனம் காதல் கொள்ள
வெட்கத்தில் சிவந்து போகும்
பூ முகம் காணும் போது
ஏக்கத்தில் வாடி விட்டு
தூக்கத்தை மறந்து நெஞ்சம்
பக்கத்தில் நிறைந்து போகும்
பாக்களை எழுதி வாழும் !
வில்லென வளைந்து பேசும்
புருவத்தின் அழகு கண்டா
பல்லினைக் காட்டி உந்தன்
பாதத்தில் வீழ்ந்து போனேன்
இல்லை என் இனிய ராணி
கல்லென சொல்லும் உந்தன்
நல்லரும்கவிதை கேட்டே
காதலில் ஏங்கிப் போனேன்!
இருவிழி திறந்து மெல்ல
தருகிற இன்பம் தன்னை
பெறுகிற ஆசை கொண்டா
பேதையே காதல் கொண்டேன்
உருக்கிய தங்கம் போல
உடலினைப் பெற்ற தாலோ
இருகரம் நீட்டி உன்னை
இணைத்திட நானும் வந்தேன்
கார்குழல் மறைவினின்று
கரு விழி ஆடுகின்ற
திருவிளை யாடல் தன்னை
சிறுமனம் கண்டு கொண்டு
உறவினில் ஆசை கொண்ட
பருந்தினைப் போல காமச்
சிறகினை விரிக்கத் தானோ
சொந்தமாய்க் காதல் கொண்டேன்!!!
செம்மலர் இதழ்கள் தன்னில்
செம்மையாய் முத்தமொன்றை
எம்மலர் இதழ்கள் சூட
ஏங்கியா வந்து நின்றேன்
உம்மலர் இதழ்கள் தன்னில்
உதிர்ந்திடும் கவிதை கேட்டே
எம்மனம் ஏங்கி ஏங்கி
உன்னிடம் வந்ததம்மா
கட்டியே அனைத்து உன்னை
கனியிதழ் சுவைத்து மெல்லக்
கட்டிலில் ஒட்டி வாழும்
கனவை நான் காணவில்லை
எட்டியே நின்று உந்தன்
இதழ் சிந்தும் கவிதை தன்னில்
ஒட்டியே ஒழுகும் வெல்லப்
பாகினை குடிக்க வந்தேன்
சந்தமாய் சொல்லும் உந்தன்
செந்தமிழ்க் கவிதை தன்னை
நெஞ்சிலே சூடும் போது
சிந்தனை பொங்கி வருமே
கந்தலாய்ப் போன நெஞ்சம்
கவிதையை கேட்ட பின்பு
சொந்தமாய் உன்னை எண்ணி
சொர்க்கத்தில் மிதந்ததம்மா !
காலையில் எழுந்து உந்தன்
கருவிழி காண வேண்டி
வேலையை மறந்து நெஞ்சம்
வேகமாய் வந்த போது
சேலையாய் உந்தன்மீது
சேர்ந்தநல் துணைவரோடு
தாழையே உன்னைக்கண்டு
தனிமரம் ஆகிப்போனேன்!!!
அனிச்சப்பூ போல நீயும்
கனவினில் வந்து வந்து
கனியிதழ் வாயினின்று
கவிதையைச் சொல்லுவாயே
பனிபடர் மலரே அந்தப்
பாக்களின் நினைவில்தானே
தனிமரம் போல நானும்
தரணியில் வாடுகின்றேன்!
வாடிய நெஞ்சம் இன்று
வளர்தமிழ் கலந்ததாலே
ஆடியமனத்தில் நாளும்
அழுந்திய உயிராய் நிற்கும்
தேடியே சரண் புகுந்து
திகழொளி யா கி வந்த
நாடிய தமிழையென்றும்
நலமுடன் போற்றி வாழ்வேன் !
No comments:
Post a Comment