நெஞ்சமொரு கவி எழுத
நினைத்ததையா நேற்று - அதற்குப்
பஞ்சமில்லை கவிஎழுதப்
பார்த்த கதை நூறு ! !
சாலை யோரப் பாதையிலே
நின்றிருந்தேன் நேற்று -ஒரு
வாழை உடலைப் பார்த்ததுதான்
கவிதை வந்த கூற்று !!
வாட்டசாட்டமாக வந்து
அருகினில் நின்றாள் -தன்
நோட்டம் போடும் கண்களிலே
பேசியும் நின்றாள் !!
ஆறடிக்கும் மேல் மாதைப்
பார்த்ததுண்டா நீங்கள் -நான்
அதற்கு மேலும் ஓரடியைப்
பார்த்துவிட்டேன் போங்கள் !!
வாழை மரம் போல அவள்
வானத்தைத் தொட்டாள் -இந்த
ஏழை இவன் ஐந்தடியாய்
அருகினில் நின்றாள் !!
எட்டு முழச்சேலை அவளுக்
கெந்த மூலைக்கு அது போல்
எட்டு மடங்கு வேணுமன்றோ
அந்த வாழைக்கு?!
No comments:
Post a Comment