வானமதில் வரைந்துவிட்ட கோலமிலாச் சித்திரத்தை
ஆனவரை பார்த்துவிட்டேன் காணோம் -காதல்
பானமதில் ஊறிவிட்ட எண்ணமதை நீயின்றி
எண்ணியெண்ணிப் பார்த்துவிட்டேன் காணோம் !!
இன்பமான எண்ணமதை எண்ணியெண்ணிப் பார்த்துவிட்ட
துன்பமான இவ்விரவு விடியுமோ ? என்
இன்பரதப் பொன்மயிலே உன்முகத்தைக் காணாமல்
அமைதியாகத் தூங்கவும்தான் முடியுமோ ?
காலை வரை காதலினைக் கட்டிலிலேபடுத் தெண்ணி
மூடும் விழியுள்ளும் நீ தெரிகிறாய் -அதி
காலையிலே கண்ணயரக் கனவினிலும் வந்து வந்து
ஆசையுடன் எனை ஆட்சி புரிகிறாய் !!
வெள்ளி வரப் பார்த்த ஒரு சேவல் வந்து கூவிவிட
இன்றுமென்றும் என்கவலை விடியாது ! காதல்
சொல்லுகின்ற உன் விழியின் ஓர் அசைவைப் பார்த்துவிட
ஒரு நொடியில் ஏன் கவலை விடியாது ??
ஆனவரை பார்த்துவிட்டேன் காணோம் -காதல்
பானமதில் ஊறிவிட்ட எண்ணமதை நீயின்றி
எண்ணியெண்ணிப் பார்த்துவிட்டேன் காணோம் !!
இன்பமான எண்ணமதை எண்ணியெண்ணிப் பார்த்துவிட்ட
துன்பமான இவ்விரவு விடியுமோ ? என்
இன்பரதப் பொன்மயிலே உன்முகத்தைக் காணாமல்
அமைதியாகத் தூங்கவும்தான் முடியுமோ ?
காலை வரை காதலினைக் கட்டிலிலேபடுத் தெண்ணி
மூடும் விழியுள்ளும் நீ தெரிகிறாய் -அதி
காலையிலே கண்ணயரக் கனவினிலும் வந்து வந்து
ஆசையுடன் எனை ஆட்சி புரிகிறாய் !!
வெள்ளி வரப் பார்த்த ஒரு சேவல் வந்து கூவிவிட
இன்றுமென்றும் என்கவலை விடியாது ! காதல்
சொல்லுகின்ற உன் விழியின் ஓர் அசைவைப் பார்த்துவிட
ஒரு நொடியில் ஏன் கவலை விடியாது ??
No comments:
Post a Comment