Wednesday, January 28, 2009

ஒ -சாலினி !

சாலினி சாலினி ஒ சாலினி
சாலினி நீயினி என் தோழிநீ
ஏனஇனி தனிமையில் நீஇனி
தோழமை தான்துணை நமக்கினி!

சாலினி ...சாலினி ,ஒ சாலினி!

வாஇனி நம் மனம் ஓரணி
ஏதினி கவலைகள் நமக்கினி
சாலினி பேசிடும் தமிழ் மொழி
தானினி என் கவிப் பாட்டு இனி !

சாலினி சாலினி ஒ சாலினி .!

வானினி பெய்திடும் தேன்துளி
தேனினை தந்திடும் தேனிநீ
தேரினில் தோழமைத் தேவிநீ
பாரினில் புகழொடு வாழு நீ ,

சாலினி சாலினி ஒ சாலினி! ,

என்றுமே இல்லைநாம் தனித்தனி
ஏனெனில் என் மனத் தோழி நீ !
சாலினி சாலினி ஒ சாலினி
சாலினி நீயினி என் தோழி நீ !

No comments:

Post a Comment