உயிர்க்கருவி,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மோகனக்காற்று வந்து முகங்குளிர வீசியும்
ஆணவத்திசையில் என்றும் ஆடவில்லை என்மனம்
கானகக் குருவிபோல காணவேண்டும் சுதந்திரம்
கற்கவேண்டும் உலகை ஆளும்அன்பு என்னும் மந்திரம்,
ஆயிரம் கோடிகட்கு அடிமை இல்லை என் மனம்
அன்புதன்னில் சிக்கி என்றும்அடிமை ஆவதெங்கனம்!
எண்ணமதை எழுதவேண்டி எழுந்துவந்ததொருவரி
எழுதவந்தகவிவரியோ ஏட்டளவில் பொதுவழி!
பிழையுமுண்டு பிதற்றலுண்டு பெருங்கவிஞன் நானில்லை
இராகம் மட்டும்கூடிவரும் அது இரவியின் தனிக்கலை!
இன்று மனம் ஞானிபோல எழுத எண்ணம்கொண்டது
எழுத எண்ணம்கொண்டதனால் எழுத்துவந்து விழுந்தது!
எழுதவந்த எண்ணம் எல்லாம் எனமனமேசொன்னது
படித்தவர்கள்பழிக்க இந்த ஞானிக்கென்ன வந்தது?
ஊர்கெடுத்துப் பேரெடுத்த உயர்ந்த மனம் எத்தனை?
ஊர் உயர உயிர் கொடுத்தோர் உற்ற துன்பம் எத்தனை?
பணத்தை மட்டும்போற்றி வாழும் பேய்மனங்கள் எத்தனை?
குணத்தை மட்டும் போற்றி வாழ்ந்தோர்பெற்றதுதான் எத்தனை?
அத்தனையும் எண்ணி எண்ணிப்புத்தன்செய்தான் சிந்தனை
அதனால் தான்வந்ததிந்த போதிமரப் போதனை!
புத்தனவன் பெயரைச்சொல்லி வாழும் எத்தர் எத்தனை?
சித்தம்குளிரப்பேசிவிட்டு செய்யும் குற்றம் எத்தனை?
சிலுவைதன்னில் அறைந்து போன ஏசு சொன்னது எத்தனை?
ஏசு சொன்ன வார்த்தைகளை எடுத்துக் கொண்டோர் எத்தனை?
காந்தி சொல்லி வைத்ததிந்த அன்பு என்னும் திரு வழி!
காந்திபோல இருந்து விட்டால் இல்லை கவலை இது விதி!
அனைத்து உயிரும் உணபதற்காம் என்று சொன்னது ஓரு வழி
அனைத்து உயிரும் தம் உயிராய் போற்றச்சொன்னதுதமிழ் மொழி!
எந்தவழியில்வாழ்ந்தாலும் போயொழிவது புதை குழி
என்பதனை அறிந்து கொண்டால் அன்பு தானேநல்வழி!
அன்பு கொண்ட உள்ளமென்றும் அழிவதில்லை உலகிலே
அன்பு இல்லாமனிதர்க்கிது புரியவில்லை மனதிலே!
உண்மைஅன்பு கொண்டு என்றும் உயரவேண்டும் வாழ்விலே
ஊருலகம் நூறுசொல்லும் உதற வேண்டும் தெருவிலே!
தன்மை கொண்டு வாழ்ந்து வந்தால் தர்மம் காக்கும் வாழ்வினை
உண்மை இது பொய்யில்லை உணர வேண்டும் மனதிலே!
இன்று வாழ்வு நாளை சாவு என்பதுதான்தத்துவம்
உண்மை இதை உணர்ந்துகொண்டால் உண்டு வாழ்வில் மகத்துவம்
துன்பம் உண்டு துயரம் உண்டு உலகில் அது சமத்துவம்
அத்துனையும் தாங்கிக்கொள்ளவேண்டும் மனப்பக்குவம்!
இன்று வரும் நாளைபோகும் செல்வம் ஒரு தரித்திரம்
கொஞ்சமஅதைப் புரிந்து கொணடால் யார்க்கும் உண்டு சரித்திரம்!
உழைக்க உழைக்க உயர்ந்து வரும் உழைத்த வாழ்வு நிச்சயம்
களைப்பு தீர்ந்து கவலை தீர்ந்து கனியும் வாழ்வு சத்தியம்!
அன்பு கொண்ட நெஞ்சம் தானே ஆண்டவன்தன் ஆலயம்
அறிந்து கொண்டஅன்பு கொண்டால் மகிழ்ச்சி எந்தவேளையும்
அனபு கொண்ட உள்ளம் தனை அறிந்துகொள்ளல்கடினமே
உணர்ந்து கொண்டபின்னும் கூட உறவு கொள்ளல் கடினமே!
வாயளவில் பேசப் பேசவருவதெல்லாம் இன்பம்தான்
செய்முறையில் எண்ணிப்பார்த்தால் இன்பம் கூடத் துன்பம்தான்!
ஏற்றம் உண்டு தாழ்வும் உண்டு மனித வாழ்வில் உலகிலே
கற்றுவந்த கல்வி கொண்டு கணிக்க வேண்டும் மனதிலே!
பற்று கொண்ட நெஞ்சம் கூட வேடம் போடும் உலகிலே
முற்றும் துறந்த முனிவன் கூட மாற்றம் கொள்வான் மனதிலே!
தாய்மை பாசம் உறவு எல்லாம் உதட்டளவில் உண்மையே
வாழ்ந்துகெட்டு வந்து நின்றால் புரிந்துவிடும் உண்மையே!
உயர்ந்த வாழ்வு கொண்டபோதும் உண்மை அன்பு கொள்ளுங்கள்
உண்மை அன்பை நெஞ்சில் வைத்து உலகை என்றும் வெல்லுங்கள்!
உயிர்க்குருவி பறந்து விட்டால் உடலம் வெறும் பொம்மையே!
கருணை கொண்டு வாழ்ந்திருந்தால் கூட வரும் பெருமையே!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மோகனக்காற்று வந்து முகங்குளிர வீசியும்
ஆணவத்திசையில் என்றும் ஆடவில்லை என்மனம்
கானகக் குருவிபோல காணவேண்டும் சுதந்திரம்
கற்கவேண்டும் உலகை ஆளும்அன்பு என்னும் மந்திரம்,
ஆயிரம் கோடிகட்கு அடிமை இல்லை என் மனம்
அன்புதன்னில் சிக்கி என்றும்அடிமை ஆவதெங்கனம்!
எண்ணமதை எழுதவேண்டி எழுந்துவந்ததொருவரி
எழுதவந்தகவிவரியோ ஏட்டளவில் பொதுவழி!
பிழையுமுண்டு பிதற்றலுண்டு பெருங்கவிஞன் நானில்லை
இராகம் மட்டும்கூடிவரும் அது இரவியின் தனிக்கலை!
இன்று மனம் ஞானிபோல எழுத எண்ணம்கொண்டது
எழுத எண்ணம்கொண்டதனால் எழுத்துவந்து விழுந்தது!
எழுதவந்த எண்ணம் எல்லாம் எனமனமேசொன்னது
படித்தவர்கள்பழிக்க இந்த ஞானிக்கென்ன வந்தது?
ஊர்கெடுத்துப் பேரெடுத்த உயர்ந்த மனம் எத்தனை?
ஊர் உயர உயிர் கொடுத்தோர் உற்ற துன்பம் எத்தனை?
பணத்தை மட்டும்போற்றி வாழும் பேய்மனங்கள் எத்தனை?
குணத்தை மட்டும் போற்றி வாழ்ந்தோர்பெற்றதுதான் எத்தனை?
அத்தனையும் எண்ணி எண்ணிப்புத்தன்செய்தான் சிந்தனை
அதனால் தான்வந்ததிந்த போதிமரப் போதனை!
புத்தனவன் பெயரைச்சொல்லி வாழும் எத்தர் எத்தனை?
சித்தம்குளிரப்பேசிவிட்டு செய்யும் குற்றம் எத்தனை?
சிலுவைதன்னில் அறைந்து போன ஏசு சொன்னது எத்தனை?
ஏசு சொன்ன வார்த்தைகளை எடுத்துக் கொண்டோர் எத்தனை?
காந்தி சொல்லி வைத்ததிந்த அன்பு என்னும் திரு வழி!
காந்திபோல இருந்து விட்டால் இல்லை கவலை இது விதி!
அனைத்து உயிரும் உணபதற்காம் என்று சொன்னது ஓரு வழி
அனைத்து உயிரும் தம் உயிராய் போற்றச்சொன்னதுதமிழ் மொழி!
எந்தவழியில்வாழ்ந்தாலும் போயொழிவது புதை குழி
என்பதனை அறிந்து கொண்டால் அன்பு தானேநல்வழி!
அன்பு கொண்ட உள்ளமென்றும் அழிவதில்லை உலகிலே
அன்பு இல்லாமனிதர்க்கிது புரியவில்லை மனதிலே!
உண்மைஅன்பு கொண்டு என்றும் உயரவேண்டும் வாழ்விலே
ஊருலகம் நூறுசொல்லும் உதற வேண்டும் தெருவிலே!
தன்மை கொண்டு வாழ்ந்து வந்தால் தர்மம் காக்கும் வாழ்வினை
உண்மை இது பொய்யில்லை உணர வேண்டும் மனதிலே!
இன்று வாழ்வு நாளை சாவு என்பதுதான்தத்துவம்
உண்மை இதை உணர்ந்துகொண்டால் உண்டு வாழ்வில் மகத்துவம்
துன்பம் உண்டு துயரம் உண்டு உலகில் அது சமத்துவம்
அத்துனையும் தாங்கிக்கொள்ளவேண்டும் மனப்பக்குவம்!
இன்று வரும் நாளைபோகும் செல்வம் ஒரு தரித்திரம்
கொஞ்சமஅதைப் புரிந்து கொணடால் யார்க்கும் உண்டு சரித்திரம்!
உழைக்க உழைக்க உயர்ந்து வரும் உழைத்த வாழ்வு நிச்சயம்
களைப்பு தீர்ந்து கவலை தீர்ந்து கனியும் வாழ்வு சத்தியம்!
அன்பு கொண்ட நெஞ்சம் தானே ஆண்டவன்தன் ஆலயம்
அறிந்து கொண்டஅன்பு கொண்டால் மகிழ்ச்சி எந்தவேளையும்
அனபு கொண்ட உள்ளம் தனை அறிந்துகொள்ளல்கடினமே
உணர்ந்து கொண்டபின்னும் கூட உறவு கொள்ளல் கடினமே!
வாயளவில் பேசப் பேசவருவதெல்லாம் இன்பம்தான்
செய்முறையில் எண்ணிப்பார்த்தால் இன்பம் கூடத் துன்பம்தான்!
ஏற்றம் உண்டு தாழ்வும் உண்டு மனித வாழ்வில் உலகிலே
கற்றுவந்த கல்வி கொண்டு கணிக்க வேண்டும் மனதிலே!
பற்று கொண்ட நெஞ்சம் கூட வேடம் போடும் உலகிலே
முற்றும் துறந்த முனிவன் கூட மாற்றம் கொள்வான் மனதிலே!
தாய்மை பாசம் உறவு எல்லாம் உதட்டளவில் உண்மையே
வாழ்ந்துகெட்டு வந்து நின்றால் புரிந்துவிடும் உண்மையே!
உயர்ந்த வாழ்வு கொண்டபோதும் உண்மை அன்பு கொள்ளுங்கள்
உண்மை அன்பை நெஞ்சில் வைத்து உலகை என்றும் வெல்லுங்கள்!
உயிர்க்குருவி பறந்து விட்டால் உடலம் வெறும் பொம்மையே!
கருணை கொண்டு வாழ்ந்திருந்தால் கூட வரும் பெருமையே!!
மண்ணில் பிறந்த உயிர் அனைத்தும் மண்ணில் மறைந்தாகனும்
மண்ணில் மறைந்து போகும்முன்னே மாம்புகழைச்சூடனும்!!
அதற்குவழி அனபு அன்றிவேரு ஏதும் இல்லையே
அந்த வழிதான் இந்த அற்ப வாழ்வின் எல்லையே!!!!
No comments:
Post a Comment