எங்கிருந்தோம் என யாரறிந்தோம் ?-இனி
எங்குறைவோம் என யாரறிவோம் ?
வந்திருந்தார் வந்து வாழ்ந்திருந்தார் -இங்கு
வந்த வினை சுபம் சென்று விட்டார் !
கள்ளமில்லா மனம் வெள்ளையம்மா - அது
எல்லையில்லா வெளி சென்றதம்மா !
ஊனை மட்டும் உயிர் விட்டதம்மா !-அந்த
உண்மை மட்டும் பொது சட்டமம்மா !
ஆத்மசுகம் பெறச் சென்றதம்மா -அது
அண்டந்தனில் நிலை கொண்டதம்மா !
பெற்றவரும் துயர் உற்றவரும் - அழ
முற்றுமென உயிர் விட்டதம்மா !
சொந்தமில்லை பெரும் பந்தமில்லை -அதை
தங்க வைக்க இங்கு சட்டமில்லை !
கொண்டுவந்த பொருள் ஏதுமில்லை -உடன்
கொண்டுசெல்ல வழி அங்குயில்லை!
சோ க ங்கொள்ள மனம் தேவையில்லை -அவர்
சொந்தமடி செல்ல தடையுமில்லை !
போனதெண்ணி மனம் நோவதென்ன ?-தினம்
எண்ணிஎண்ணி அழுது ஆவதென்ன ?
ஆறவிடு மனம் ஆறிவிடும் - நாள்
ஓடிவிட அது தேறி விடும் !.
வாழ்த்திடுவார் சென்று வாழவைப்பார்-என்று
வணங்கிடுவோம் என்றும் வணங்கிடுவோம்!!!
எங்குறைவோம் என யாரறிவோம் ?
வந்திருந்தார் வந்து வாழ்ந்திருந்தார் -இங்கு
வந்த வினை சுபம் சென்று விட்டார் !
கள்ளமில்லா மனம் வெள்ளையம்மா - அது
எல்லையில்லா வெளி சென்றதம்மா !
ஊனை மட்டும் உயிர் விட்டதம்மா !-அந்த
உண்மை மட்டும் பொது சட்டமம்மா !
ஆத்மசுகம் பெறச் சென்றதம்மா -அது
அண்டந்தனில் நிலை கொண்டதம்மா !
பெற்றவரும் துயர் உற்றவரும் - அழ
முற்றுமென உயிர் விட்டதம்மா !
சொந்தமில்லை பெரும் பந்தமில்லை -அதை
தங்க வைக்க இங்கு சட்டமில்லை !
கொண்டுவந்த பொருள் ஏதுமில்லை -உடன்
கொண்டுசெல்ல வழி அங்குயில்லை!
சோ க ங்கொள்ள மனம் தேவையில்லை -அவர்
சொந்தமடி செல்ல தடையுமில்லை !
போனதெண்ணி மனம் நோவதென்ன ?-தினம்
எண்ணிஎண்ணி அழுது ஆவதென்ன ?
ஆறவிடு மனம் ஆறிவிடும் - நாள்
ஓடிவிட அது தேறி விடும் !.
வாழ்த்திடுவார் சென்று வாழவைப்பார்-என்று
வணங்கிடுவோம் என்றும் வணங்கிடுவோம்!!!
No comments:
Post a Comment