பேனா,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஓ பேனாக்களே!
நீங்கள் காகித த்தைத்
தொடும் போதெல்லாம்
வடிக்கின்றீர்களே,,
அது,,
காகித எதிரியைக்
கையால் தொடுகிறோமே
என்ற எண்ணத்தில்
நீ விடும் கண்ணீரா?
அல்லது,
தாளின் மீது
தலை கீழ் நாட்டியம்
ஆடிக்களைத்த தால்
வரும் வியர் வையா?
இல்லை
கவிஞன் ஒருவன்
கற்பனைக் குதிரை
ஏறும்போது
தலைகீழாய்நின்று
அழவேண்டி இருக்கிறது
என்கிறாயா?
உள்ளத்தில் வரும்
வார்த்தைகள் எல் லாம்
உதட்டில் வர
மறுப்பதால் தானோ
உன்னை ஒருவன்
படைத்தான்!!
சட்டைக்காதலனை
விட்டுப்பிரிய
மனமில்லாத தால்தானோ
சட்டைக் காதலனை
மெட்டிப்பிடித்திருக்கிறாய்
என்ன இருந்தாலும்
நீயும் மனிதனைப்போலச்
சலனப்பேர்வழிதான்
எப்படி என்கிறாயா?
நீதான் சிலசமயம்
சட்டைக்காதலன்மீது
சிந்திவிடுகிறாயே!!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஓ பேனாக்களே!
நீங்கள் காகித த்தைத்
தொடும் போதெல்லாம்
வடிக்கின்றீர்களே,,
அது,,
காகித எதிரியைக்
கையால் தொடுகிறோமே
என்ற எண்ணத்தில்
நீ விடும் கண்ணீரா?
அல்லது,
தாளின் மீது
தலை கீழ் நாட்டியம்
ஆடிக்களைத்த தால்
வரும் வியர் வையா?
இல்லை
கவிஞன் ஒருவன்
கற்பனைக் குதிரை
ஏறும்போது
தலைகீழாய்நின்று
அழவேண்டி இருக்கிறது
என்கிறாயா?
உள்ளத்தில் வரும்
வார்த்தைகள் எல் லாம்
உதட்டில் வர
மறுப்பதால் தானோ
உன்னை ஒருவன்
படைத்தான்!!
சட்டைக்காதலனை
விட்டுப்பிரிய
மனமில்லாத தால்தானோ
சட்டைக் காதலனை
மெட்டிப்பிடித்திருக்கிறாய்
என்ன இருந்தாலும்
நீயும் மனிதனைப்போலச்
சலனப்பேர்வழிதான்
எப்படி என்கிறாயா?
நீதான் சிலசமயம்
சட்டைக்காதலன்மீது
சிந்திவிடுகிறாயே!!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
No comments:
Post a Comment