Sunday, August 18, 2013

சாலைகள்!!

  சாலைகள்
                          ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பரந்த பூமியின்
விரிந்த ரேகைக் கோடுகளா?
அல்லது இரத்த நாளங்களா?

இல்லை,இல்லை,
ஊர் முழுதும் ஓடிச் செல்லும்
ஒற்றுமைவாதிகள்!

பெருந்தலைவர்களின்
பெயரைச் சூடிக்கொள்ள வந்த
பொதுவுடமைகள்!

வளர்ந்து கொண்டேவரும்
வாகனவாய்க்கால்கள்!

பொதுப்பணித்துறையினரின்
பொன்முட்டையிடும் வாத்து!

அன்றோ ஊருக்குச்செல்லும்
பண்டையகாலப் பாதச்சுவடுகள்
இன்றோ உயிரைப் பறிக்கும்
எமதர்மனின் ஏஜண்டுகள்!

பிரதமரின் வருகைக்காக மட்டுமே
புதுச்சட்டை போட்டுக்கொள்ளும்
மேனாமினுக்கிகள்!!

ஓய்வே இல்லாத
ஓவர்டைம் ஊழியர்கள்!

பழுதடைந்தால் மட்டமே
குட்டி போடும் புதுப்பிறவிகள்!

பல இடங்களில்
பாலக்கால்களால்
தண்ணீரையும் இரயிலையும்
தாண்டிப்போனாலும்
சில இடங்களில்
பணிந்தே போகும்
பள்ளப்பாம்புகள்!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment