ஆடுகிற ஆட்டமெல்லாம்
ஆடி வந்த மானிடா!
ஓடுகிற ஓட்டமெல்லாம்
ஓடி முடித்த தேனடா?
காசு பணம் வேண்டுமெனக்
கருணை மனம் சொல்லுதா ?
உயிரு மட்டும் போதுமென்ற
ஞானம் வந்து பிறந்ததா?
குடியும் கூத்தும் போனதா
ஆட்டம் பாட்டம் ஓய்ந்ததா?
அடிதடிகள் மறந்து நெஞ்சில்
ஆணவத் திமிர் ஒழிந்ததா ?
பந்தபாசம் வேண்டுமென்று
பயத்தில் மனம் வேண்டுதா ?
சொந்தபந்தம் எல்லோரையும்
சொந்தங்கொள்ளத் துடிக்குதா ?
ஆடுகிற ஆட்டம் கண்டு
இயற்கை தந்த அடியிது !
மூடிவைத்த வீட்டுக்குள்ளே
வைத்த சிறைப் படிப்பிது !
ஊரை ஏய்த்து வந்த பணம்
உதவிக்கரம் நீட்டுமா ?
வாங்கிவைத்த லஞ்சப்பணம்
வந்து உன்னைக் காக்குமா?
கோடிகோடியாக நீயும்
கொள்ளை அடித்த பணமெல்லாம்
வீடுதேடி வந்து உன்னை
கொள்ளிவைக்கும் பணமடா!
குடும்பத்தோடு வாழ வைத்த
சூச்சுமந்தான் புரியுதா?
சுற்றுச்சூழல் மூடிவைத்துச்
சொல்லும் சேதி தெரியுதா…
ஆடி வந்த மானிடா!
ஓடுகிற ஓட்டமெல்லாம்
ஓடி முடித்த தேனடா?
காசு பணம் வேண்டுமெனக்
கருணை மனம் சொல்லுதா ?
உயிரு மட்டும் போதுமென்ற
ஞானம் வந்து பிறந்ததா?
குடியும் கூத்தும் போனதா
ஆட்டம் பாட்டம் ஓய்ந்ததா?
அடிதடிகள் மறந்து நெஞ்சில்
ஆணவத் திமிர் ஒழிந்ததா ?
பந்தபாசம் வேண்டுமென்று
பயத்தில் மனம் வேண்டுதா ?
சொந்தபந்தம் எல்லோரையும்
சொந்தங்கொள்ளத் துடிக்குதா ?
ஆடுகிற ஆட்டம் கண்டு
இயற்கை தந்த அடியிது !
மூடிவைத்த வீட்டுக்குள்ளே
வைத்த சிறைப் படிப்பிது !
ஊரை ஏய்த்து வந்த பணம்
உதவிக்கரம் நீட்டுமா ?
வாங்கிவைத்த லஞ்சப்பணம்
வந்து உன்னைக் காக்குமா?
கோடிகோடியாக நீயும்
கொள்ளை அடித்த பணமெல்லாம்
வீடுதேடி வந்து உன்னை
கொள்ளிவைக்கும் பணமடா!
குடும்பத்தோடு வாழ வைத்த
சூச்சுமந்தான் புரியுதா?
சுற்றுச்சூழல் மூடிவைத்துச்
சொல்லும் சேதி தெரியுதா…
No comments:
Post a Comment