Sunday, February 9, 2014

இணை ஏது?

                                      இணை ஏது?
                                          -----------
இல்லைதமிழ்   மொழிக்கு இணை
              இங்கு என இரைந்தோமே!
முல்லைமலர்   போலதமிழ்
               மணக்குமென  மொழிந்தோமே!
   
நல்லதமிழ்   மொழிபேசி
               நடைமுறையில்  வாழ்ந்தோமா?
தெள்ளுதமிழ்   பாட்டெழுதத்
               தெரிந்துநாம்   வைத்தோமா?

நல்லதமிழ்   மொழியின்புகழ்
                  நாம்அறிந்து   வைத்தோமா?
இல்லையெனத்   தான் உரைப்பார்
                  இதனைநாம்   மறுப்போமா?

நெல்லைத்தமிழர்  பேசும்தமிழ்
                  நல்லதமிழ்   மொழிதானா?
கள்ளைப்போல்   மயக்கம்தரும்
                 கனிந்ததமிழ்   அதுதானா?

சென்னைத்தமிழர்   பேசும்மொழி
                 செந்தமிழ்   மொழிதானா?
தென்னைமரத்   தென்றலெனத்
                 திகழும்தமிழ்   அதுதானா?

கோவைத்தமிழர்   பேசும்மொழி
                 கொஞ்சுதமிழ்   மொழிதானா?
கோவைப்பழம்   போல் இனிக்கும்
                  கன்னித்தமிழ்   அதுதானா?

செம்மொழியில்   பெயர்சூட்டி
                  அழைப்பதுநாம் எப்போது?
தனித்தமிழில்   நாம்பேசி
                  சிறப்பதுநாம் எப்போது?

No comments:

Post a Comment