Sunday, February 9, 2014

தமிழர்கள்!!! !!

                                   தமிழர்கள்!!!                                                                             இ ந்தியத்தாயின் பிள்ளைகளில்
நாங்கள்
நிறம் கறுத்தவர்கள்-ஆனால்
மனம் வெளுத்தவர்கள்!

அன்பிற்கும் பண்பிற்கும்
அடிபணிபவர்கள்-ஆனால்
அடிமைத்தனத்தை
அடித்து ஓட்டுபவர்கள்!

கட்டளைகளால் எங்கள்
கைகளை யாரும்
கட்டிப்போடமுடியாது-ஆனால்
கருனைவிழியின்
பார்வைக்குமட்டும்
நாங்கள் கனிந்துபோவோம்!

வள்ளுவனால்
வாழ்க்கை  இலக்கணத்தை
வகுத்து  வைத்தவர்கள்!
வந்தாரை வாழவைத்தே
பாழாய்போனவர்கள்!

சாதியெனும் சாக்கடையில்
விழுந்து
நித்தம் நித்தம்
செத்துப் பிழைப்பவர்கள்!!

ஒற்றுமை என்னும்
உயிர்ச்சொல்லைமறந்ததனால்
போகுமிடமெல்லாம்
பொசுக்கப்படுபவர்கள்!!

No comments:

Post a Comment