தங்கத்தாமரைத்தளிர் முகமதனை
கவியிவன் கண்கள் தேடுது!
தங்கத்தமிழ்மலர் பேசமறந்திட
என்விழிகளும் இங்கேவாடுது!
வின்னில் பகலொளி விளக்கைப்போலே
மின்னிடும் வான்வெளி மீன்களே!
என்னிடம் கொஞ்சம் பேசச்சொல்லி
பெண்ணிடம் தூது போங்களே!
தூங்காதிருவிழி தாங்காமனது
தனிமையில் இங்கு தவிக்கிது!
மங்களமலரின் மஞ்சத்தில் மனது
மயங்கிட தினமும் துடிக்கிது!
வானில்வட்டம் போடும் அழகு
வண்ணப்பறவைக் கூட்டங்களே!
கன்னம்குழியச் சிரிக்கும்அந்த
மான்விழிமங்கையைக் காட்டுங்களே!
கண்களிரண்டும் கருநிறவண்டாய்
மின்னுமஅவள்முகம் கண்டாயா?
கருநிறக்குயிலே கவியிவன் தனிமையில்
வாடுதல் நீபோய்ச் சொன்னாயா?
கவியிவன் கண்கள் தேடுது!
தங்கத்தமிழ்மலர் பேசமறந்திட
என்விழிகளும் இங்கேவாடுது!
வின்னில் பகலொளி விளக்கைப்போலே
மின்னிடும் வான்வெளி மீன்களே!
என்னிடம் கொஞ்சம் பேசச்சொல்லி
பெண்ணிடம் தூது போங்களே!
தூங்காதிருவிழி தாங்காமனது
தனிமையில் இங்கு தவிக்கிது!
மங்களமலரின் மஞ்சத்தில் மனது
மயங்கிட தினமும் துடிக்கிது!
வானில்வட்டம் போடும் அழகு
வண்ணப்பறவைக் கூட்டங்களே!
கன்னம்குழியச் சிரிக்கும்அந்த
மான்விழிமங்கையைக் காட்டுங்களே!
கண்களிரண்டும் கருநிறவண்டாய்
மின்னுமஅவள்முகம் கண்டாயா?
கருநிறக்குயிலே கவியிவன் தனிமையில்
வாடுதல் நீபோய்ச் சொன்னாயா?
No comments:
Post a Comment