Sunday, May 31, 2015

கண்ணழகி!!!


கருவண்டு போலிரண்டு
விழிகண்டு நெஞ்சம்
தேனுண்ட பொன்வண்டு
போல்வானில் துஞ்சும்!!

இருபுருவம் வில்லென்று
மனம்கண்டு  கொண்டு
அன்பென்ற சொல்லொன்றை
தாவென்று கெஞ்சும்!!

இமையிரண்டு சிட்டென்று
விழியிரண்டில் பறக்க
அதுகண்டு என்மனதில்
காதல்மது சுரக்க!!1

பூவென்று பொன்வண்டு
விழியிரண்டை நெருங்க
போவென்று பொன்வண்டை
இமையிரண்டும்துரத்த!!

இருகூந்தல் சடையதனில்
பெருங்காந்தல் சூட
கருமேகம் என்றெண்ணி
சிறுமயில்கள் ஆட!!!

கண்ணழகி கார்கூந்தல்
பெண்ணழகி இவளோ?
மின்னுகிற இ ணையழகு
மண்ணுலகில் உளதோ?

என்னென்று நான்சொல்ல
மானொத்த அழகு!
விண்ணேறிப் பறக்கிறது
என்கவிதை மனது!!

No comments:

Post a Comment