Sunday, February 9, 2014

தமிழர்கள்!!! !!

                                   தமிழர்கள்!!!                                                                             இ ந்தியத்தாயின் பிள்ளைகளில்
நாங்கள்
நிறம் கறுத்தவர்கள்-ஆனால்
மனம் வெளுத்தவர்கள்!

அன்பிற்கும் பண்பிற்கும்
அடிபணிபவர்கள்-ஆனால்
அடிமைத்தனத்தை
அடித்து ஓட்டுபவர்கள்!

கட்டளைகளால் எங்கள்
கைகளை யாரும்
கட்டிப்போடமுடியாது-ஆனால்
கருனைவிழியின்
பார்வைக்குமட்டும்
நாங்கள் கனிந்துபோவோம்!

வள்ளுவனால்
வாழ்க்கை  இலக்கணத்தை
வகுத்து  வைத்தவர்கள்!
வந்தாரை வாழவைத்தே
பாழாய்போனவர்கள்!

சாதியெனும் சாக்கடையில்
விழுந்து
நித்தம் நித்தம்
செத்துப் பிழைப்பவர்கள்!!

ஒற்றுமை என்னும்
உயிர்ச்சொல்லைமறந்ததனால்
போகுமிடமெல்லாம்
பொசுக்கப்படுபவர்கள்!!

இணை ஏது?

                                      இணை ஏது?
                                          -----------
இல்லைதமிழ்   மொழிக்கு இணை
              இங்கு என இரைந்தோமே!
முல்லைமலர்   போலதமிழ்
               மணக்குமென  மொழிந்தோமே!
   
நல்லதமிழ்   மொழிபேசி
               நடைமுறையில்  வாழ்ந்தோமா?
தெள்ளுதமிழ்   பாட்டெழுதத்
               தெரிந்துநாம்   வைத்தோமா?

நல்லதமிழ்   மொழியின்புகழ்
                  நாம்அறிந்து   வைத்தோமா?
இல்லையெனத்   தான் உரைப்பார்
                  இதனைநாம்   மறுப்போமா?

நெல்லைத்தமிழர்  பேசும்தமிழ்
                  நல்லதமிழ்   மொழிதானா?
கள்ளைப்போல்   மயக்கம்தரும்
                 கனிந்ததமிழ்   அதுதானா?

சென்னைத்தமிழர்   பேசும்மொழி
                 செந்தமிழ்   மொழிதானா?
தென்னைமரத்   தென்றலெனத்
                 திகழும்தமிழ்   அதுதானா?

கோவைத்தமிழர்   பேசும்மொழி
                 கொஞ்சுதமிழ்   மொழிதானா?
கோவைப்பழம்   போல் இனிக்கும்
                  கன்னித்தமிழ்   அதுதானா?

செம்மொழியில்   பெயர்சூட்டி
                  அழைப்பதுநாம் எப்போது?
தனித்தமிழில்   நாம்பேசி
                  சிறப்பதுநாம் எப்போது?