Sunday, July 27, 2014

                                               நலம்வாழ நல்வழி
                                                   ------**** -------
காலைக்கதிர்வரும் வேளை எழுந்ததும்
கடமையைத் துவங்கிவிடு- தாய்
கடவுளைத் துதித்து விடு!

          ஓமெனும் பிரனவ மந்திரமதனை
          ஓங்கியே ஒலித்து விடு- மூச்சினை
           வாங்கியே இழுத்து விடு!

ஊளைச்சதையினை உடம்பிலிருந்தே
ஓடவிரட்டி விடு- அதற்கு
உடல்பயிற்சிகள் செய்துவிடு!

          நீரின்றி உடம்பு நிலையாதென்பது
          சித்தர்கள் வகுத்த வழி- நிறைய
          நீரினைக் குடித்துக்கழி!

சுத்தம்சுகமாய்ச் சோறுபோடும்
மூத்தோர்சொன்னமொழி-நீரில்
நித்தமும் நீயும்குளி!

          வாதபித்த கபமதை உடம்பில்
          பதமாய் ஓட விடு-அதற்கு
          அறுசுவை உணவை எடு!

அறுசுவை உணவை அனுதினம் உண்டால்
நாடிகள் சம்மாகும்-அதுவே
கோடிக்குச் சம மாகும்!

          பச்சைக்காய்கறி பயிருடன்கீரையைப்
          பாங்குடன் உண்டுவிடு-பல
          நோய்களை ஓட்டிவிடு!

வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல்
முறையாய் எடுத்துவிடு-வாழ்வை
நிறைவாய் வாழ்ந்து விடு!

          புகையிலைமதுவெனும் போகப்பொருள்களை
          மனதிலும் நினைக்காதே-உடல்
           நலம் அதை இழக்காதே !

தெய்வப்புலவன் வள்ளுவன் குறளினை
தொய்வின்றிப் படித்து விடு-அதன்
சொல் படி வாழ்ந்து விடு!!!

No comments:

Post a Comment