நலம்வாழ நல்வழி
------**** -------
காலைக்கதிர்வரும் வேளை எழுந்ததும்
கடமையைத் துவங்கிவிடு- தாய்
கடவுளைத் துதித்து விடு!
ஓமெனும் பிரனவ மந்திரமதனை
ஓங்கியே ஒலித்து விடு- மூச்சினை
வாங்கியே இழுத்து விடு!
ஊளைச்சதையினை உடம்பிலிருந்தே
ஓடவிரட்டி விடு- அதற்கு
உடல்பயிற்சிகள் செய்துவிடு!
நீரின்றி உடம்பு நிலையாதென்பது
சித்தர்கள் வகுத்த வழி- நிறைய
நீரினைக் குடித்துக்கழி!
சுத்தம்சுகமாய்ச் சோறுபோடும்
மூத்தோர்சொன்னமொழி-நீரில்
நித்தமும் நீயும்குளி!
வாதபித்த கபமதை உடம்பில்
பதமாய் ஓட விடு-அதற்கு
அறுசுவை உணவை எடு!
அறுசுவை உணவை அனுதினம் உண்டால்
நாடிகள் சம்மாகும்-அதுவே
கோடிக்குச் சம மாகும்!
பச்சைக்காய்கறி பயிருடன்கீரையைப்
பாங்குடன் உண்டுவிடு-பல
நோய்களை ஓட்டிவிடு!
வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல்
முறையாய் எடுத்துவிடு-வாழ்வை
நிறைவாய் வாழ்ந்து விடு!
புகையிலைமதுவெனும் போகப்பொருள்களை
மனதிலும் நினைக்காதே-உடல்
நலம் அதை இழக்காதே !
தெய்வப்புலவன் வள்ளுவன் குறளினை
தொய்வின்றிப் படித்து விடு-அதன்
சொல் படி வாழ்ந்து விடு!!!
------**** -------
காலைக்கதிர்வரும் வேளை எழுந்ததும்
கடமையைத் துவங்கிவிடு- தாய்
கடவுளைத் துதித்து விடு!
ஓமெனும் பிரனவ மந்திரமதனை
ஓங்கியே ஒலித்து விடு- மூச்சினை
வாங்கியே இழுத்து விடு!
ஊளைச்சதையினை உடம்பிலிருந்தே
ஓடவிரட்டி விடு- அதற்கு
உடல்பயிற்சிகள் செய்துவிடு!
நீரின்றி உடம்பு நிலையாதென்பது
சித்தர்கள் வகுத்த வழி- நிறைய
நீரினைக் குடித்துக்கழி!
சுத்தம்சுகமாய்ச் சோறுபோடும்
மூத்தோர்சொன்னமொழி-நீரில்
நித்தமும் நீயும்குளி!
வாதபித்த கபமதை உடம்பில்
பதமாய் ஓட விடு-அதற்கு
அறுசுவை உணவை எடு!
அறுசுவை உணவை அனுதினம் உண்டால்
நாடிகள் சம்மாகும்-அதுவே
கோடிக்குச் சம மாகும்!
பச்சைக்காய்கறி பயிருடன்கீரையைப்
பாங்குடன் உண்டுவிடு-பல
நோய்களை ஓட்டிவிடு!
வாரம் ஒருமுறை எண்ணைக் குளியல்
முறையாய் எடுத்துவிடு-வாழ்வை
நிறைவாய் வாழ்ந்து விடு!
புகையிலைமதுவெனும் போகப்பொருள்களை
மனதிலும் நினைக்காதே-உடல்
நலம் அதை இழக்காதே !
தெய்வப்புலவன் வள்ளுவன் குறளினை
தொய்வின்றிப் படித்து விடு-அதன்
சொல் படி வாழ்ந்து விடு!!!
No comments:
Post a Comment