Sunday, September 2, 2012

kotai malai

        ஆண்-                     கோடை மழை  கொட்டுதடி குளிக்க போலாம்  வாரியா ?      

 பெண்-                 ஆடை நனைய ஆட்டம் போட்டால்  சேட்டை செய்ய மாட்டியா ?

 ஆண்-                 வாடைக் காத்து  வீசுதடி  வந்தனைக்க மாட்டியா ?

 பெண்-                     வந்தனைக்க வந்துவிட்டால்  வளைச்சுப் போடமாட்டிய ?

ஆண்-                  வலையைப் போட்டு மீன் புடிச்சா கொழம்பு வைக்க மாட்டியா ?

பெண்-                    கொழம்பு வச்சு நான் கொடுத்தால் குடம் குடமா குடிப்பியா ?

 ஆண்-                  குழம்பை நானும் குடிச்சுப் பிட்டு  குறும்பு செய்தால் தடுப்பயா ?

 பெண்-                     குறும்பு செய்ய நானும் விட்டால்  வறம்பு மீற மாட்டியா ?

 ஆண்-                             வரம்புயர நீருயரும் நாத்து வைப்போம் வாரியா ?

பெண்-                       வச்ச நாத்து விழைஞ்சு நின்னா சே ர் த் த று ப் போம் வாரியா ?

No comments:

Post a Comment