முத்தமிழ வீதியிலே மிதந்துவரும் கவிதையென ப்
பத்திரமாய் வந்துவிட்டேன் இங்கு இங்கு -வந்து
சித்திரமாய் வானமதில் சேர்ந்து விளையாடும் முகில்ச்
சங்கெடுத்து ஊதுகிறேன் அங்கு அங்கு !!
ஊதுகிற சங்கினிலே செந்தமிழை நாதமெனச்
சேர்த்தபடி ஊதுகிறேன் பாட்டு பாட்டு -அது
பகுத்தறிவு பண்புதமிழ் என்று தினம் பாடுகிற
பாவேந்தன் பாடல்களைக் கேட்டு கேட்டு !
பட்டுவண்ணச் சிறகினிலே பறந்துவரும் கொக்குயெனப்
பாய்ந்து வரும் என்கவிதைப் பாட்டு பாட்டு -பாவேந்தன்
கொட்டித்தந்த செந்தமிழத் தொட்டிலிலே தூங்குகிற
பட்டுமனம் எழுதிவிட்ட சீட்டு சீட்டு !!!
வானரத வீதியிலே வரைந்து வைத்த ஓவியமாய்ப்
போனதம்மா என்கவிதை நெஞ்சம் நெஞ்சம் -தமிழ்
கானம் பாடும் மேடையிலே கவிதைபாட என்மனது
போனபோது மாறியது கொஞ்சம் கொஞ்சம் !
பாட்டெழுதும் பாதையிலே நாட்டுயர்வை எழுதாத
கவிஞன் உலகில் இல்லையெனக் கூறு கூறு -அவன்
நாட்டுயர்வை எழுதெழுதப் பாட்டுலகப் புதுப்பூவில்
பொங்குமன்றோ தேன்கவிதைச் சாறு சாறு !!
சின்னச்சிறு கண்மணியே சிரிக்கின்ற பொன்மலரே
பாவேந்தன் பாடலைநீ பாடு பாடு -தமிழ்
பொன்னருவி சிந்துகிற புதுப்பாடல் நீபாடி
புதுவாழ்வை நோக்கி நீயும் ஓடு ஓடு !
முத்தையொத்த வார்த்தைகளால் முழுமனிதன் ஆவதற்கு
இலக்கணமே வகுத்து வைத்தான் அன்று அன்று -அந்த
முத்துவரிக் கவிதைகளை முழுவதுமாய்ப் படித்துவிட்டால்
சிறக்குமன்றோ உன் வாழ்வும் நன்று நன்று !
இமயம் முதல் குமரிவரை குளித்துவரும் தென்றலிலே
தமிழ்த் தேனைக் கலக்கிச்சொன்னான் கவிதை கவிதை -தீய
சாதிஎன்றும் சமயம் என்றும் பேசுகின்ற பொய்யர்களை
மிருகமென்று சொல்லச்சொன்னான் அவனை அவனை !
தட்டுத்தடுமாறி அவன் காதல் பாட்டைப் பாடிவிட்டால்
கிட்டவந்து நின்றுவிடும் சொர்க்கம் சொர்க்கம் -அவன்
சினந்தவிழிப் பார்வையிலே சின்னக்கவி சொன்னாலும்
கண்டபடி தட்டிவிடும் முரசம் முரசம் !
கட்டிவைத்த கோவிலிலே சாமியில்லை வெறுங்கல்லாம்
வெட்டிச்செலவு செய்யாதே என்றான் என்றான் -நமது
மெயயறிவே தெய்வமென்று முத்தமிழக் கவிசெய்து
மூடமனப் பழக்கமதை வென்றான் வென்றான் !
மானமில்லா மனங்களையும் ஈனகுண மனிதனையும்
தேன் கவிதைப் பாட்டாலே கொன்றான் கொன்றான் -மது
பானமதில் மூழ்கிவிட்ட மடையர்தமைத் திசை மாற் றி
மானமுடன் வாழவழி சொன்னான் சொன்னான் !
கானமழை பொழியுமந்த காளையவன் கவிதைகளை
அனுதினமும் நாம்பாடம் செய்வோம் செய்வோம் -அவன்
சீர்திருத்தக் கவிதைகளை நாடுயர நாம் பாடி
சீர்திருந்தி வாழ்க்கையிலே உய்வோம் உய்வோம் !
வடிகின்ற தேன்போல இனிக்கின்ற தமிழ் மொழிக்கு
ஈடுஇணை ஏதும் இங்கு இல்லை இல்லை -அது
இல்லைஎன்று சொல்லிவிட்டு இருட்டறையில் நாமிருந்தால்
வடக்கிருந்து வந்துவிடும் தொல்லை தொல்லை !
பெண்மைநிலை உயர் வதற்கும் கைம்மை நிலை மறைவதற்கும்
கருணையுடன் பொன்கவிதை சொன்னான் சொன்னான் -வாழ்க்கை
உண்மைதனை உணர்ந்துநிதம் தன்மையுடன் வாழ்வதற்கு த்
தன்மானக் கருத்துகளை ச் சொன்னான் சொன்னான் !
சுற்றமுடன் நீயெழுந்து குற்றங்களை நேர்நிறுத்தச்
சிங்கமெனத் தமிழா நீ சீறு சீறு -என்றும்
சீற்ற மிகு சொல்லெடுத்துச் சிங்காரக் கவிதொடுத்து
சீர் திருத்தம் செய்யச்சொன்னான் பாரு பாரு !
அடுப்பூத மட்டுமின்றி அரசாள வருவதற்கு
அச்சமின்றி நடைபோடு பெண்ணே பெண்ணே -நீ
இடுப்போடு குடமெடுக்க மட்டுமல்ல என்றென்றும்
படிப்போடு பாராளு பெண்ணே பெண்ணே !
முத்துநகை வேண்டுமென்று பெண்பார்க்க வருவதென்றால்
முடியாது என்றுசொல்லு பெண்ணே பெண்ணே -பணப்
பித்துகொண்ட மாந்தனவன் முன்னாலே நீசென்று
முகங்காட்டி நிற்காதே பெண்ணே பெண்ணே !
சொத்துசுகம் அத்துனையும் சேர்த்துக்கொண்டு வந்தாலும்
சொந்தம்கொள்ளப் போகாதே தம்பி தம்பி -அவள்
கொண்டுவரும் சொத்துக்கெல்லாம் விலையாகிப் போவதற்கு
விலைமாடா நாமெல்லாம் தம்பி தம்பி !
கையுமுண்டு காலுமுண்டு பேரு புகழ் சேர்க்காமல்
விலையாகிப் போகாதே தம்பி தம்பி -நெஞ்சில்
பற்றுமுண்டு பாசமுண்டு வீரங்கொண்டு உயராமல்
வீணாகிப் போகாதே தம்பி தம்பி !
காசுபணம் தேவையில்லை அன்புமட்டும் போதுமென்று
அனைவருமே சொல்வோமா இங்கு இங்கு -நாம்
பேசுகிறசெந்தமிழை மூச்சென்று சொல்லியிங்கு
முடிப்போமா கவியரங்கை நாமும் இங்கு ?
பத்திரமாய் வந்துவிட்டேன் இங்கு இங்கு -வந்து
சித்திரமாய் வானமதில் சேர்ந்து விளையாடும் முகில்ச்
சங்கெடுத்து ஊதுகிறேன் அங்கு அங்கு !!
ஊதுகிற சங்கினிலே செந்தமிழை நாதமெனச்
சேர்த்தபடி ஊதுகிறேன் பாட்டு பாட்டு -அது
பகுத்தறிவு பண்புதமிழ் என்று தினம் பாடுகிற
பாவேந்தன் பாடல்களைக் கேட்டு கேட்டு !
பட்டுவண்ணச் சிறகினிலே பறந்துவரும் கொக்குயெனப்
பாய்ந்து வரும் என்கவிதைப் பாட்டு பாட்டு -பாவேந்தன்
கொட்டித்தந்த செந்தமிழத் தொட்டிலிலே தூங்குகிற
பட்டுமனம் எழுதிவிட்ட சீட்டு சீட்டு !!!
வானரத வீதியிலே வரைந்து வைத்த ஓவியமாய்ப்
போனதம்மா என்கவிதை நெஞ்சம் நெஞ்சம் -தமிழ்
கானம் பாடும் மேடையிலே கவிதைபாட என்மனது
போனபோது மாறியது கொஞ்சம் கொஞ்சம் !
பாட்டெழுதும் பாதையிலே நாட்டுயர்வை எழுதாத
கவிஞன் உலகில் இல்லையெனக் கூறு கூறு -அவன்
நாட்டுயர்வை எழுதெழுதப் பாட்டுலகப் புதுப்பூவில்
பொங்குமன்றோ தேன்கவிதைச் சாறு சாறு !!
சின்னச்சிறு கண்மணியே சிரிக்கின்ற பொன்மலரே
பாவேந்தன் பாடலைநீ பாடு பாடு -தமிழ்
பொன்னருவி சிந்துகிற புதுப்பாடல் நீபாடி
புதுவாழ்வை நோக்கி நீயும் ஓடு ஓடு !
முத்தையொத்த வார்த்தைகளால் முழுமனிதன் ஆவதற்கு
இலக்கணமே வகுத்து வைத்தான் அன்று அன்று -அந்த
முத்துவரிக் கவிதைகளை முழுவதுமாய்ப் படித்துவிட்டால்
சிறக்குமன்றோ உன் வாழ்வும் நன்று நன்று !
இமயம் முதல் குமரிவரை குளித்துவரும் தென்றலிலே
தமிழ்த் தேனைக் கலக்கிச்சொன்னான் கவிதை கவிதை -தீய
சாதிஎன்றும் சமயம் என்றும் பேசுகின்ற பொய்யர்களை
மிருகமென்று சொல்லச்சொன்னான் அவனை அவனை !
தட்டுத்தடுமாறி அவன் காதல் பாட்டைப் பாடிவிட்டால்
கிட்டவந்து நின்றுவிடும் சொர்க்கம் சொர்க்கம் -அவன்
சினந்தவிழிப் பார்வையிலே சின்னக்கவி சொன்னாலும்
கண்டபடி தட்டிவிடும் முரசம் முரசம் !
கட்டிவைத்த கோவிலிலே சாமியில்லை வெறுங்கல்லாம்
வெட்டிச்செலவு செய்யாதே என்றான் என்றான் -நமது
மெயயறிவே தெய்வமென்று முத்தமிழக் கவிசெய்து
மூடமனப் பழக்கமதை வென்றான் வென்றான் !
மானமில்லா மனங்களையும் ஈனகுண மனிதனையும்
தேன் கவிதைப் பாட்டாலே கொன்றான் கொன்றான் -மது
பானமதில் மூழ்கிவிட்ட மடையர்தமைத் திசை மாற் றி
மானமுடன் வாழவழி சொன்னான் சொன்னான் !
கானமழை பொழியுமந்த காளையவன் கவிதைகளை
அனுதினமும் நாம்பாடம் செய்வோம் செய்வோம் -அவன்
சீர்திருத்தக் கவிதைகளை நாடுயர நாம் பாடி
சீர்திருந்தி வாழ்க்கையிலே உய்வோம் உய்வோம் !
வடிகின்ற தேன்போல இனிக்கின்ற தமிழ் மொழிக்கு
ஈடுஇணை ஏதும் இங்கு இல்லை இல்லை -அது
இல்லைஎன்று சொல்லிவிட்டு இருட்டறையில் நாமிருந்தால்
வடக்கிருந்து வந்துவிடும் தொல்லை தொல்லை !
பெண்மைநிலை உயர் வதற்கும் கைம்மை நிலை மறைவதற்கும்
கருணையுடன் பொன்கவிதை சொன்னான் சொன்னான் -வாழ்க்கை
உண்மைதனை உணர்ந்துநிதம் தன்மையுடன் வாழ்வதற்கு த்
தன்மானக் கருத்துகளை ச் சொன்னான் சொன்னான் !
சுற்றமுடன் நீயெழுந்து குற்றங்களை நேர்நிறுத்தச்
சிங்கமெனத் தமிழா நீ சீறு சீறு -என்றும்
சீற்ற மிகு சொல்லெடுத்துச் சிங்காரக் கவிதொடுத்து
சீர் திருத்தம் செய்யச்சொன்னான் பாரு பாரு !
அடுப்பூத மட்டுமின்றி அரசாள வருவதற்கு
அச்சமின்றி நடைபோடு பெண்ணே பெண்ணே -நீ
இடுப்போடு குடமெடுக்க மட்டுமல்ல என்றென்றும்
படிப்போடு பாராளு பெண்ணே பெண்ணே !
முத்துநகை வேண்டுமென்று பெண்பார்க்க வருவதென்றால்
முடியாது என்றுசொல்லு பெண்ணே பெண்ணே -பணப்
பித்துகொண்ட மாந்தனவன் முன்னாலே நீசென்று
முகங்காட்டி நிற்காதே பெண்ணே பெண்ணே !
சொத்துசுகம் அத்துனையும் சேர்த்துக்கொண்டு வந்தாலும்
சொந்தம்கொள்ளப் போகாதே தம்பி தம்பி -அவள்
கொண்டுவரும் சொத்துக்கெல்லாம் விலையாகிப் போவதற்கு
விலைமாடா நாமெல்லாம் தம்பி தம்பி !
கையுமுண்டு காலுமுண்டு பேரு புகழ் சேர்க்காமல்
விலையாகிப் போகாதே தம்பி தம்பி -நெஞ்சில்
பற்றுமுண்டு பாசமுண்டு வீரங்கொண்டு உயராமல்
வீணாகிப் போகாதே தம்பி தம்பி !
காசுபணம் தேவையில்லை அன்புமட்டும் போதுமென்று
அனைவருமே சொல்வோமா இங்கு இங்கு -நாம்
பேசுகிறசெந்தமிழை மூச்சென்று சொல்லியிங்கு
முடிப்போமா கவியரங்கை நாமும் இங்கு ?